பயனுள்ள சமையல் குறிப்புகள்
உருளைக் கிழங்கு சிப்ஸ் செய்யும் பொழுது உருளைக்கிழங்கைச் சீவி உப்பு கலந்த நீரில் ஊறவைத்து உலர்த்தி பின்பு சிப்ஸ் போடலாம்.

வாழைத்தண்டு சமைக்கும் முன்பு அதை தேவையான அளவுக்கு வெட்டி சிறிது நேரம் மோரில் ஊற வைத்த பின் சமைக்கலாம்.

கீரை வாடாமல் இருக்க கீரையை ஒரு துணியில் நனைத்து வைக்கலாம்.

உப்புமா செய்யும் போது சிறிது தயிர் சேர்த்துக் கொண்டால் உப்புமா சுவையாக இருக்கும்.

சர்க்கரை பொங்கல் செய்யும் பொழுது அதில் வெல்லம் பாதி சர்க்கரை பாதி சேர்த்து செய்யலாம்.
